Wednesday, January 26, 2011

கண்டேன் கற்றேன் (004)

ஆடிடும் மயிலைக் கண்டேன்
ஆடிடக் கற்றுக்கொண்டேன்
பாடிடும் குயிலைக் கண்டேன்
பாடிடக் கற்றுக்கொண்டேன்

ஓடிடும் மானைக் கண்டேன்
ஓடிடக் கற்றுக்கொண்டேன்
பேசிடும் கிளியைக் கண்டேன்
பேசிடக் கற்றுக்கொண்டேன்

நீந்திடும் மீனைக் கண்டேன்
நீந்திடக் கற்றுக்கொண்டேன்
தாவிடும் குரங்கைக் கண்டேன்
தாவிடக் கற்றுக்கொண்டேன்

சேமிக்கும் எறும்பைக் கண்டேன்
சேமிக்கக் கற்றுக்கொண்டேன்
சேர்ந்து உண்ணும் காகம் கண்டேன்
சேர்ந்து உண்ணக் கற்றுக்கொண்டேன்

நன்றியுள்ள நாயைக் கண்டேன்
நன்றி உணர்வைக் கற்றுக்கொண்டேன்
உழைத்திடும் எருதைக் கண்டேன்
உழைத்திடக் கற்றுக்கொண்டேன்!

நன்றி: தினமணி-சிறுவர்மணி

No comments:

Post a Comment