Sunday, January 30, 2011

வண்ணச்சிட்டே வா வா (034)



கொஞ்சும் வண்ணச்சிட்டே-நீ
கொஞ்சம் வாயேன் கிட்டே
பஞ்சு போன்ற உன்னை-நான்
பார்ப்பேன் மெல்லத் தொட்டே!

மிளகைப்போன்ற கண்கள்-சிறு
முள்ளைப்போலும் அலகு
பளபளக்கும் சிறகு-உன்
பிஞ்சுக்காலும் அழகு!

சின்ன உயிரும் நீயே-என்
சிந்தை கவர்ந்திட்டாயே
கன்னல் மொழிதான் பேசி-என்
கைமேல் அமருவாயே!

என்ன வேணும் சொல்லு-நீ
பறக்கும் வேகம் அம்பு
சின்னப்பாப்பா வாரேன் உன்
சிறகில் ஏற்றிச் செல்லு!

நன்றி: மா.ஆறுமுகக்கண்ணன் - சிறுவர்மணி 29.01.2011

No comments:

Post a Comment