Monday, May 25, 2009

கல்வியா? செல்வமா?




அண்மையில் தினமணியில் வெளியான ஒரு கட்டுரையில் படித்தது இது.

நர்சரி பள்ளியில் படிக்கும் ஒரு தமிழ்க்குழந்தை சொன்னதாம்: “நான் பெரியவன் ஆனதும் என்னுடைய அப்பாவிற்கு ஒரு வீடு வாங்கித்தருவேன். ஏனென்றால் எங்களுடைய வீட்டை விற்றுத்தான் என்னை நர்சரி பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கிறார்.”

நகைச்சுவைக்காக இது சொல்லப்பட்டாலும் இன்றைய தமிழ்நாட்டின் கல்விச்சூழ்நிலை இதுதான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

கல்வியை ‘கல்விச்செல்வம்’ என்று சொல்லுகிறார்கள். ஆனால் அந்தக்கல்வியைப்பெறுவதற்கு பொருட்செல்வம் தேவை என்பதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆரம்பத்தில் கடன்வாங்கி பிள்ளைகளை சேர்த்துவிடுவதும், காலப்போக்கில் கட்டணம் செலுத்தமுடியாமல் அரசுப்பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்றம் செய்வதும் நாம் அன்றாடம் காணக்கூடியதுதான்.

நடுத்தர மக்களின் ஆங்கில மோகத்தைப்பயன்படுத்தி இந்த நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அடிக்கும் பகல் கொள்ளையை கண்டுகொள்ள யாருமே இல்லை.
கட்டாய நன்கொடைக்கு எதிராக புகார்கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொல்வது வாடிக்கையான சமாதானம்தான். தங்களுடைய பிள்ளைகள் படிக்கும் பள்ளிநிர்வாகத்தின்மீது புகார் கொடுக்க யார்தான் முன்வருவார்கள்?

இந்த அரசாங்கம் எதைஎதையோ இலவசமாகக்கொடுக்கிறது. இன்னும் கொடுக்கப்போவதாக சொல்லி வருகிறது.

தரமான கல்வியை இலவசமாக கொடுப்போம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லையே, அது ஏன்?

No comments:

Post a Comment