Thursday, November 5, 2009

சிவப்புக்கம்பளமும் ரத்தினக்கம்பளமும்



அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மனை ஒதுக்கீடு, வீடு ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை இவற்றுக்கெல்லாம் அமைச்சர் ஒதுக்கீடு, அல்லது சிறப்பு ஒதுக்கீடு என்று பெயரிட்டு ‘ஒதுக்கிக்கொண்டு’ இருப்பது 05.11.2009 நாளிட்ட தினமணி தலையங்கம் வாயிலாக அன்னாடங்காச்சிகளுக்கு தெரியவந்துள்ளது.

பாமரனுக்கு இந்த ஊழல் தெரிந்துபோகாமல் இருப்பதற்காக இந்த அதிகார சுரண்டலுக்கு Discretionary Quota என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த ஊழலின் ஒரு முனை இப்போது சிக்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணைக்காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவர்களுக்கு இந்த அமைச்சர் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாணவர்களும் காவல்துறை ஏடிஜிபி இருவரின் பிள்ளைகள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

விவகாரம் இப்போது முற்றி சிபிஐ விசாரணை கோரப்பட்டுள்ளது.

இந்த ஊழலின் சங்கிலிக்கண்ணிகளை நாம் எளிதாக ஊகித்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற சிறப்பு ஒதுக்கீட்டில் பணக்காரவீட்டுப்பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகமே சிவக்கம்பளம் விரிக்கும் என்றால், தனியார் பல்கலைக்கழகங்கள் நன்கொடை இல்லாமலேயே ரத்தினக்கம்பளம் விரிப்பார்கள்தானே!

1 comment:

ஜோதிஜி said...

இன்னும் சிறப்பாக உள்ளே உள்ள விசயங்களை எழுதி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

பயன் உள்ள சிந்தனைகளுக்கு வாழ்த்துக்கள்.

Post a Comment