Saturday, November 7, 2009

மணக்கிறது மக்களாட்சி





இப்போதெல்லாம் ஒரு சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற ஒரு கோடி ரூபாய் தேவைப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தில் தேர்தல் செலவை சந்திக்க வேட்பாளரும் அரசியல் கட்சிகளும் துண்டேந்தி வாக்காளரை படியேறி சந்தித்தனர்.

அப்போதெல்லாம் நிதிபெறுவதற்காக வாசற்படியேறிச்சென்ற வேட்பாளர்கள் இப்போது ‘நிதி’ கொடுப்பதற்காக படியேறிச்சென்று வாக்காளர்களை சந்திக்கிறார்கள்.

இப்போது யாரும் துண்டேந்தி நிதி திரட்டுவது இல்லை.

ஆனால் தேர்தல் நிதியளிப்பு கூட்டங்கள் நடத்துவதும் ‘சூட்கேஸ்’ கட்சித்தலைவரிடம் கொடுக்கப்படுவதும் நடைபெறுகிறது.

இந்த சூட்கேஸ்களில் பணம் எப்படி திரட்டப்படுகிறது?

அரசியல் கட்சிகள் தங்களுடைய தொண்டர்களைக்காட்டிலும் தொழிலதிபர்களையே தேர்தல் நிதிக்காக நம்பியிருக்கின்றனர்.

தொழிலதிபர்களும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிற்குமே தேர்தல்நிதி கொடுக்கிறார்கள்.

ஆனால் தங்களுக்குள் ரகசியமாக பேசிவைத்துக்கொண்டு எந்தக்கட்சி வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்தக்கட்சிக்கு ஐம்பது சதவீதம் தொகையை கூடுதலாக கொடுக்கி
றார்கள்.

பணம் வாங்கிக்கொண்ட கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தால், தொழிலதிபர்கள் என்னென்ன சலுகைகள் வேண்டுமென்று கேட்கிறார்களோ அதையெல்லாம் அரசு செய்யவேண்டும்.

எதிர்க்கட்சியில் அமர்ந்தால் தொழிலுக்கு இடையூறு செய்யும் பிரச்சினையான கேள்விகளை சட்டமன்றத்தில் கேட்கக்கூடாது.


'விலைவாசியைக்குறைக்கிறேன்' என்று வியாபாரிகளுக்கு கடிவாளம் போடக்கூடாது.

'அன்னாடங்காச்சிகளுக்கு ஆதரவாக இருப்பேன்' என்று ஆன்லைன் வியாபாரத்திற்கு குறுக்கே நிற்கக்கூடாது.

இவையெல்லாம் ஜனநாயக ஒப்பந்தங்கள்.

மீறினால் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வெடிக்கும்.

அரசின் நடவடிக்கைகளை கூடவே இருந்து கண்காணிக்க சட்டமன்றத்திலும், அமைச்சரவையிலும் தொழிலதிபர்களின் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கவேண்டும்.

எந்த அமைச்சரவையிலாவது, எல்லா அமைச்சர்களும் ‘கக்கன்’களாக இருந்து பார்த்திருக்கிறோமா?

No comments:

Post a Comment