Tuesday, November 3, 2009

மாறிப்போன வகுப்பறையில் மாறாத உளவியல்






வகுப்பறைச்சூழல் மாறிப்போன காலம் இது.

ஆசிரியர்கள் இதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

ஆசிரியர் பயிற்சியின்போது அளிக்கப்படும் உளவியல் கல்வியில் இதற்கென மாற்றங்களைக்கொண்டுவர வேண்டியது அவசியம்.

இந்தக்கருத்தை வலியுறுத்தும் தலையங்கம் தினமணி 02.11.2009 ல் வெளியாகியுள்ளது.

தலையங்கத்தின் தலைப்பு “மனம் நோகாமல் சொல்” என்பதாகும்.

மாணவரின் மனம் நோகாமல் ஆசிரியர் கற்பித்தல் பணியில் ஈடுபடவேண்டியது இக்கால அவசியம்.

இக்கால மாணவர்கள் தங்களுக்கு பெரிய பெரிய விஷயங்களெல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள்.

இந்த எண்ணப்போக்கு ஆசிரியரின் நடை, உடை, பாவனை, பாடத்திட்டம், கற்பிக்கும் முறை இவற்றையெல்லாம் அலட்சியக்கண்ணோட்டத்தோடு காணத்தூண்டுபவை.

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழாசிரியர் சோலையின் அழகு, வண்டுகளின் ஓசை, நீர்த்தடாகம், நீந்திவிளையாடும் மீன், மீன் முட்டியதால் பால்சுரந்த பசுக்கள், தலைவன், தலைவி, தலைவனின் பிரிவு, தலைவியின் துயரம், பசலை படர்ந்த மேனி, கழன்றுவிழும் வளையல்கள் என்றெல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பார்.

மாணவர்களும் கவனமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

பாடத்தினூடே தமிழுணர்வும், தமிழன் என்ற உணர்வும் ஊட்டப்படும்.

ஆனால் இன்றைய நிலையில் இந்த வர்ணனைகள் மாணவர்களுக்கு ஒரு “சப்பை மேட்டரா”க தெரியக்கூடும்.

இந்தச்சூழலில், மாணவர்களை முட்டிபோடச்சொல்வது, பிரம்பால் அடிப்பது, வேறுவகைகளில் அவமானப்படுத்துவது என்பதெல்லாம் கல்வி உளவியலுக்கு முரண்பட்டச்செயல்கள் என்பதை இந்த தலையங்கம் எடுத்துக்கூறுகிறது.

இன்றைய கல்வியாளர்கள் அரசியல்வாதிகளுக்குள் அடங்கிப்போயிருக்கிறார்கள்.

அவர்கள் அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும்.

ஆனால் ஆசிரியர் பயிற்சியின்போது அளிக்கப்படும் உளவியல் பாடத்திட்டத்தில் மட்டும் தேவையான மாற்றங்களை உடனடியாக கொண்டுவரட்டும்.

இல்லையெனில் எதிர்காலம் பொறுப்பானவர்களை மன்னிக்காது.

1 comment:

கையேடு said...

உண்மைதாங்க கல்வித்துறை பல வழிகளில் மாற்றம் பெறவேண்டியிருக்கிறது..

சமீப காலமாகக் காணமுடியவில்லையே என்று நினைத்தேன். மீண்டும் வாசிப்பதில் மகிழ்ச்சி.

Post a Comment