Friday, May 7, 2010

சத்துணவிற்கே சோகையா?





“அப்பனுக்கு சாராயம்; பிள்ளைக்கு சத்துணவு” என்று மேட்டுக்குடி மக்கள் விமர்சனம் செய்வது உண்டு.

முதற்பாதி மாதாமாதம் வளர்ச்சியடைகிறது. முதல்வரின் கவனத்தை உடனடியாக கவருகிறது.

அடுத்தபாதி மாதாமாதம் தேய்கிறது. முதல்வர் கிடக்கட்டும்; அதிகாரிகள்கூட கவனிப்பதில்லை.

சத்துணவு இப்போது ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது.

இது கசப்பான உண்மை. பள்ளிகளுக்குச்செல்லும் மருத்துவக்குழுவின் கணிப்பின்படி ஏறத்தாழ 90 சதவீதம் மாணவ மாணவிகள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படிப்பவர்கள் ஏழை விவசாயக்குடும்ப பின்னணியில் இருப்பவர்கள். காலையில் கிடைப்பதை தின்றுவிட்டு அல்லது குடித்துவிட்டு பள்ளிக்கு வருபவர்கள்.

மதியம் பள்ளியில் சாப்பாடு கொடுக்கும்வரை பசிமயக்கத்தோடு இருப்பவர்கள்.

சத்துணவு என்னும் பெயரில் ஒரு சாப்பாடு கொடுத்தபிறகுகூட முழுப்பசி என்பது போய் அரைப்பசி என்றாகிவிடுகிறது இந்தக்குழந்தைகளுக்கு.

ஒரு மாணவருக்கு 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 20 பைசா காய்கறி, 8.5 பைசா மளிகைப்பொருட்கள் என்று அரசாங்கம் பார்த்துப்பார்த்து செலவழிக்கிறது. இதில் லஞ்சம் எல்லாம் போக ஒரு பிள்ளைக்கு என்ன கிடைக்கும் என்பதை நீங்களே கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள்.

இந்த லட்சணத்தில் சிறப்பு உணவு என்று ஒரு கூத்து.

16 கிராம் உருளைக்கிழங்கும், 20 கிராம் கொண்டைக்கடலையும் சிறப்பு உணவுப்பட்டியல்.

ஏதோ மூன்று முட்டை இருப்பதால் இந்தப்பிள்ளைகள் இன்னும் சத்துணவிற்காக வரிசையில் நிற்கிறார்கள்.

சத்துணவு வழங்கப்படும் முறை சீர் படவே“அப்பனுக்கு சாராயம்; பிள்ளைக்கு சத்துணவு” என்று மேட்டுக்குடி மக்கள் விமர்சனம் செய்வது உண்டு.

முதற்பாதி மாதாமாதம் வளர்ச்சியடைகிறது. முதல்வரின் கவனத்தை உடனடியாக கவருகிறது.

அடுத்தபாதி மாதாமாதம் தேய்கிறது. முதல்வர் கிடக்கட்டும்; அதிகாரிகள்கூட கவனிப்பதில்லை.

சத்துணவு இப்போது ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது.

இது கசப்பான உண்மை. பள்ளிகளுக்குச்செல்லும் மருத்துவக்குழுவின் கணிப்பின்படி ஏறத்தாழ 90 சதவீதம் மாணவ மாணவிகள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படிப்பவர்கள் ஏழை விவசாயக்குடும்ப பின்னணியில் இருப்பவர்கள். காலையில் கிடைப்பதை தின்றுவிட்டு அல்லது குடித்துவிட்டு பள்ளிக்கு வருபவர்கள்.

மதியம் பள்ளியில் சாப்பாடு கொடுக்கும்வரை பசிமயக்கத்தோடு இருப்பவர்கள்.

சத்துணவு என்னும் பெயரில் ஒரு சாப்பாடு கொடுத்தபிறகுகூட முழுப்பசி என்பது போய் அரைப்பசி என்றாகிவிடுகிறது இந்தக்குழந்தைகளுக்கு.

ஒரு மாணவருக்கு 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 20 பைசா காய்கறி, 8.5 பைசா மளிகைப்பொருட்கள் என்று அரசாங்கம் பார்த்துப்பார்த்து செலவழிக்கிறது. இதில் லஞ்சம் எல்லாம் போக ஒரு பிள்ளைக்கு என்ன கிடைக்கும் என்பதை நீங்களே கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள்.

இந்த லட்சணத்தில் சிறப்பு உணவு என்று ஒரு கூத்து.

16 கிராம் உருளைக்கிழங்கும், 20 கிராம் கொண்டைக்கடலையும் சிறப்பு உணவுப்பட்டியல்.

ஏதோ மூன்று முட்டை இருப்பதால் இந்தப்பிள்ளைகள் இன்னும் சத்துணவிற்காக வரிசையில் நிற்கிறார்கள்.

சத்துணவு வழங்கப்படும் முறை சீர் படவேண்டும்.

சரியான கண்காணிப்பு இல்லாததால் சத்துணவு ஆயாக்கள் கொடுக்கு அளவை வாங்கிக்கொண்டுவிட்டு ஒதுங்கிப்போய்விடவேண்டும்.

நம்முடைய முதலமைச்சரின் கண்களில் இருந்து எதுவுமே தப்பாது என்றெல்லாம் பத்திரிக்கைகாரர்கள் பீற்றிக்கொள்கிறார்கள்.

இன்னும் முதல்வரின் பார்வை இந்த சோகை பீடித்த சத்துணவு மீது படவில்லையோ?
ண்டும்.

சரியான கண்காணிப்பு இல்லாததால் சத்துணவு ஆயாக்கள் கொடுக்கு அளவை வாங்கிக்கொண்டுவிட்டு ஒதுங்கிப்போய்விடவேண்டும்.

நம்முடைய முதலமைச்சரின் கண்களில் இருந்து எதுவுமே தப்பாது என்றெல்லாம் பத்திரிக்கைகாரர்கள் பீற்றிக்கொள்கிறார்கள்.

முதல்வரின் பார்வை இன்னும் இந்த சோகை பீடித்த சத்துணவு மீது படவில்லையோ?

No comments:

Post a Comment