Monday, June 8, 2009

கருணைக்கண் திறக்குமா?...கல்வித்தாகம் தீருமா?...





அரசுப்பள்ளிகளிலும் அரசின் உதவிபெற்று நடைபெறும் பள்ளிகளிலும் தமிழ்மீடியம் வகுப்புகளைப்போன்றே ஆங்கில மீடியம் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன என்பது நகர்ப்புறவாசிகள் பலரும் அறியாத ஒன்று.

அரசின் உதவிபெற்று நடைபெற்றுவரும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊதியத்தை மட்டும் அரசே கொடுத்துவிடும். பள்ளியின் நிர்வாகம் முழுவதும் தனிநபர்களிடம் இருக்கும். இவை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இல்லை.

அரசுப்பள்ளிகளிலும் அரசின் உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ்வழியாக பயிலும் மாணவர்களிடம் எந்தஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. முற்றிலும் இலவசம்.

மாறாக, ஆங்கில வழியில் பயில விரும்பும் மாணவர்களுக்கு 6 முதல் 8 வகுப்புகளுக்கு கட்டணமாக 200 ரூபாயும் 9,10 வகுப்புகளுக்கு 250 ரூபாயும் 11,12 வகுப்புகளுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

அரசுப்பள்ளிகளையும் அரசின் உதவிபெறும் பள்ளிகளையும் நாடிவருபவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள்தான்.

ஆங்கில வழியில் தங்களுடைய பிள்ளைகள் படித்து மேல்தட்டு மக்களுக்கு இணையாக வளர வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுவதில் என்ன தவறு?

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியை முற்றிலும் இலவசமாக அளிப்பதைப்போன்றே ஆங்கில வழியில் பயில விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக்கல்வி அளிப்பதால் வரிவருவாயில் மூழ்கித்திளைக்கும் தமிழக அரசு மூழ்கிப்போய்விடுமா என்ன?

No comments:

Post a Comment