Thursday, June 25, 2009

குறைவான தங்கம்....நிறைவான தரம்




சாதனை படைத்த செவித்திறன் குறைந்தோர் பட்டியலில் மேலும் இருவர் சேர்ந்துள்ளனர்.

இந்த இருவரும் தமிழகத்தைச்சேர்ந்தவர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் செய்தி.

காரைக்குடியைச்சேர்ந்த பாண்டி முருகன், கோயம்புத்தூரைச்சேர்ந்த நாகா தேவராஜ் இருவரும் செவித்திறன் குறைந்தவர்களுக்கான கோவை மாநகராட்சிப்பள்ளி மாணவர்கள்.

கடந்த ஆண்டில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இருவரும் முறையே 300/400, 296/400 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் 6 வருட ஒருங்கிணைந்த பி.டெக். பட்டப்படிப்பில் இருவரும் சேர்ந்துள்ளனர்.

இதே பள்ளியில் படித்த நான்கு மாணவர்கள் ஏற்கனவே கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் SPEECH AND HEARING IMPAIRED PERSONS PROGRAMME ல் சேர்ந்து பி.டெக். படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான கோவை மாநகராட்சிப்பள்ளியின் தலைமை ஆசிரியை மதிப்பிற்குரிய தமிழ்ச்செல்வி கூறும்போது இந்த ஆறுமாணவர்களுக்கும் கலசலிங்கம் பொறியியல் கல்வி நிர்வாகம் இலவச கல்வி அளித்து வருவதாக நன்றியுடன் குறிப்பிட்டார்.

செவித்திறன் குறைந்தவர்களுக்கு கல்வி கற்பது எவ்வளவு கடினமானது என்பதை கற்பிக்கும் பணியில் உள்ளவர்கள் அறிவார்கள்.

கடினமான பணியை அடக்கமாக செய்திருக்கும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான கோவை மாநகராட்சிப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இலவசக்கல்வி அளிக்க முன்வந்த கலசலிங்கம் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கும் நாம் நன்றி கூறவேண்டும்.

No comments:

Post a Comment