Friday, July 3, 2009
நானும் ஒண்ணு சொல்லிக்கிறேன்
கல்விநிறுவனங்களில் நன்கொடைகளைத் தடுக்க திரு. கி.வீரமணி ஒரு அருமையான யோசனையை கூறியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
அதாவது, அரசுக்கல்லூரிகள் அதிகமாக திறக்கப்பட்டால் தனியார்கல்லூரிகளின் கொட்டம் அடக்கப்படுமாம்.
அரசுக்கல்லூரிகளில் இடம் கிடைக்காமல்தான் மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நாடிப்போவதாக இவர் கூறுகிறார்.
திரு. கி.வீரமணியின் கருத்து ஏற்கத்தக்கதல்ல.
பழமையான பாடப்பிரிவுகள் அரசுக்கல்லூரிகளில் நிரந்தரமாக குடியிருக்கின்றன.
காலத்துக்கு ஏற்ப புதிய படிப்புகள் தனியார் கல்லூரிகளில் துவங்கப்படுகின்றன.
அறிவைப் பெருக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக நாம் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புவதில்லை.
இவன் நாலெழுத்துபடித்து ஒருவேலைக்குப்போய் இந்த குடும்பத்தை நல்லநிலைக்கு கொண்டுவருவான் என்று நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புகிறார்கள்.
அதனால் அறிவியல் மாற்றத்திற்கு ஏற்ப புதிய படிப்புகளை மாணவர்கள் தேர்ந்து எடுக்கிறார்கள்.
மாணவர்களின் கல்வித்தாகத்தை நன்றாகத்தெரிந்து கொண்ட தனியார் கல்விநிறுவனங்கள் ஏழை எளிய பெற்றோர்களை சுரண்டிக்கொழுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
திரு. கி.வீரமணியின் தலைமையில் நடைபெறும் கல்விநிறுவனங்கள் மாணவர்களுக்கு இலவசக்கல்வி அளிக்கிறதா என்ன?
அதெல்லாம் இருக்கட்டும்.
கல்லூரிகளில் நன்கொடையை ஒழித்துக்கட்ட யோசனை கூறும் திரு கி.வீரமணி, தனியார் பள்ளிகளில் நன்கொடையை ஒழித்துக்கட்ட என்ன யோசனை கூறப்போகிறார்?
அரசாங்கமே முன்வந்து அதிக அளவில் மெட்ரிக் பள்ளிகளைத்திறந்தால், பெற்றோர்கள் தனியார் மெட்ரிக்பள்ளிகளை புறக்கணித்துவிடுவார்கள் என்று யோசனை கூறப்போகிறாரா?
கல்வி வியாபாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் கள்ளக்கூட்டணியை மறக்க எதுவேண்டுமானாலும் அவர் சொல்லலாம்.
ஆனால் அதையெல்லாம் மக்கள் ஏற்கவேண்டுமே?
Labels:
என் பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல பதிவு. உங்கள் பதிவுகளை தொடர்சியாக படித்து வருகிறேன். பல நல்ல தகவல்களை தருகிறீர்கள். மிக்க நன்றி
Post a Comment