Friday, July 31, 2009

மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஒரு கடிவாளம்





தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் வேலை நாட்கள் ஒரே சீராக இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக 2009-2010 ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலையும் வெளியிட்டுள்ளது பாராட்டிற்குரியது.

சமச்சீர் கல்வி ஏறக்குறைய கானல் நீராகிப்போன நிலையில், சமச்சீர்கல்விமுறைக்கு பெரும் தடையாக உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஒரு கடிவாளம் போட்டிருக்கிறது தமிழக அரசு.

மனம் போன போக்கில் பள்ளிகளின் வேலைநாட்களை வடிவமைப்பதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் தொல்லையைக்கொடுத்துவந்தன மெட்ரிகுலேஷன் பள்ளிகள்.

ஒரே வீட்டைச்சேர்ந்த மூன்று நான்கு பிள்ளைகள் வெவ்வேறு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் சூழ்நிலையில், அவர்களுடைய தேர்வுநாட்களும், விடுமுறைநாட்களும் வெவ்வேறாக இருக்கும்போது பெற்றோர்கள் படும் சிரமம் சொல்லிமாளாது.

இந்த புதிய உத்திரவு செம்மையாக செயல்படுத்தப்படுமேயானால் மெட்ரிக் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப்படிக்கவைக்கும் பெற்றோரின் மன அழுத்தம் சிறிதளவு குறையும் என்று நம்பலாம்.

கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை என்று தமிழக அரசு அறிவித்துள்ளதையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

மேலும், தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் யாவும் காசோலைகள் மற்றும் வங்கிவரைவோலைகள் மூலமாகத்தான் செலுத்தப்படவேண்டும் என்று அரசு அறிவிப்பதன்மூலம் கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் பள்ளி நிர்வாகங்களுக்கு அச்சத்தை உண்டுபண்ணக்கூடும் என்பதிலும் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment