Sunday, July 5, 2009

இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக்



ஜூலை 15ம்நாள் காமராஜர் பிறந்தநாள். இலவசக்கல்வி தந்த மானுடதெய்வத்தின் பிறந்தநாள்.

இந்த நாள் கல்விவளர்ச்சி நாளாக தமிழக அரசால் கடந்த மூன்று ஆண்டுகளாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இவ்வாண்டு கொண்டாட்டத்திற்கு ஒரு கோடியே முப்பத்து மூன்று லட்ச ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இந்த கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டத்தில் ஏதாவது பொருள் இருக்கிறதா?

ஏழை எளிய பள்ளிக்குழந்தைகளை வேகாத வெய்யிலில் வெறும்காலுடன் ஊர்வலமாக அழைத்துச்செல்வது, அங்கொன்றும் இங்கொன்றுமாக பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்துவது என்பதுதானே நடந்துவருகிறது?

கூட்டம்போட்டு பேசுவதால் சில “பெரிசு”களுக்கு சோடாவும் சால்வையும் கிடைக்கும் என்பதைத்தவிர இந்த நாளில் வேறு சிறப்பு என்ன இருக்கிறது?

கல்வி வியாபாரமாகிப்போன இந்த நாளில், அதற்குக்காரணமாக இருந்த திராவிட ஆட்சியினர் கல்வி வளர்ச்சிநாள் கொண்டாடுவது மக்களை ஏமாற்றும் வித்தை.

“இது கல்வி வளர்ச்சி நாள்” இல்லை என்பதும் “கல்வி வியாபாரிகளின் வளர்ச்சி நாள்” என்பதும் மக்களுக்கு நன்றாகத்தெரியும்.

கல்வி வளர்ச்சிநாள் கொண்டாட அரசு ஒதுக்கியிருக்கும் பணத்தில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக நிதி 24 லட்சமும் அடக்கம்.

பெற்றோர் ஆசிரியர்கழக நிதி என்பது ஏழை எளிய மக்கள் சுருக்குப்பையை அவிழ்த்துக்கொடுத்த பணம் என்பது அரசுக்குத்தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் கிராமப்புறத்து ஆசிரியர்களுக்கு இந்த உண்மை நன்றாகத்தெரியும்.

தினமும் கிழக்கு வெளுக்கிறது. "கல்வி வளர்ச்சிநாள் சாயம்" வெளுக்கும் நாள் எந்த நாளோ?

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment