Friday, July 17, 2009

இடியாப்பச்சிக்கலில் சமச்சீர்கல்வி(?)





சமச்சீர்கல்விமுறையை நடைமுறைக்குக்கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய திமுகவின் சுருதி இப்போது குறைந்து வருகிறது.

சமச்சீர்கல்விமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய மாணவர் சங்கத்தால் வலியுறுத்தப்படும் நிலையில் சட்டமன்றத்தில் இப்பிரச்சினை மீண்டும் எழுப்பப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் யாருக்கும் பாதகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சமச்சீர்கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறையை அரசு மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.

முதல்வர் தம்முடைய பதில் உரையின் மூலம் சமச்சீர்கல்விமுறையை மிகத்தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார் என்பது நமக்குத்தெளிவாகிறது.

“தமிழகத்தில் இப்போது நான்கு வாரியங்கள் உள்ளன. அவற்றில் 82 சதவீத மாணவர்கள் மாநில கல்வி வாரியத்திலும், 16 சதவீத மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் கல்வி வாரியத்திலும், மிகக்குறைந்த அளவு மாணவர்கள் ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி வாரியத்திலும் பயின்று வருகின்றனர்” என்றார் முதல்வர்.

இந்தப்பிரச்சினையின் சிக்கல் “இடியாப்பச்சிக்கல்” என்பது முதல்வருக்கு தெளிவாகத்தெரிந்துவிட்டது.

முதல்வரைப்பொறுத்தவரை பிரச்சினை 82 சதவீத மாணவர்களையும், 16 சதவீத மாணவர்களையும், 2 சதவீத மாணவர்களையும் ஒரே தராசுத்தட்டில் நிறுத்தி எப்படி சமநீதி வழங்குவது என்பதில் இல்லை.

அவருடைய சிந்தனையே வேறு.

82 சதவீத பெற்றோரின் அதிருப்தியையும், 18 சதவீத பெற்றோரின் முகச்சுழிப்பையும், 2 சதவீத பெற்றோர்களின் எரிச்சல் பார்வையையும் சந்திக்கவேண்டுமா?

அதன் மூலம் வாக்குவங்கியை இழக்கவேண்டுமா?

எத்தனையோ தேன்கூடுகளில் துணிந்து கைவைக்கிறார் நம்முடைய முதல்வர்.

சமச்சீர்கல்வி என்கிற தேன்கூட்டில் கைவைப்பதால் புறங்கை நக்கும் பாக்கியம் கிடைக்காது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது.

No comments:

Post a Comment