Tuesday, July 14, 2009

108க்கு ஒரு சபாஷ்!






உயிர்காக்கும் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டுவரும் 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழக அரசின் சாதனைகளில் இன்னொரு அத்தியாயம்.

இன்னும் ஓராண்டுகூட நிறைவடையாத 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள சேவைத்துறை.

அவசர கால மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றுள்ள பல பெண்கள் இந்த சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் என்பது பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கிறது.

இவர்கள் இளம் வயதினராக இருந்தபோதும் மிகவும் துணிச்சலாக விபத்துகால முதல் உதவி, அவசரகால மகப்பேறு இவற்றில் சாதனை படைத்துவருவது பாராட்டத்தக்கது.

அண்மையில் தினமணி நாளிதழின் கொண்டாட்டம் பகுதியில் இந்த சாதனை மகளிரைப்பற்றிய கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

பிற பத்திரிக்கைகளும் ஆங்காங்கு செயல்படும் சாதனை மகளிரை உலகிற்கு அறிமுகம் செய்தல் வேண்டும்.

ஒரே நாளில் 12 பிரசவ கேஸ்களைப்பார்த்த திருக்காட்டுப்பள்ளி எம்.பிரதீபா,

சாலை விபத்தில் சிக்கியவருக்கு தன்னம்பிக்கையூட்டிய தஞ்சாவூர் ஆ.ரூபாவதி,

பச்சமலையின் உள்ளார்ந்த கிராமங்களில் 3 பிரசவங்கள் பார்த்த பெரம்பலூர் கே.காந்தி,

ஆம்புலன்ஸிலேயே ஆறு பிரசவங்களைப்பார்த்தவரும் பட்டவகுப்பில் தங்கப்பதக்கம் பெற்றவருமான முசிறி எம்.சுந்தரேஸ்வரி,

விபத்தில் சிக்கியவரின் விலைஉயர்ந்த உடைமைகளை உரியவரிடம் சேர்த்த திருச்சி திருமதி சசிகலா செந்தில்குமார்,

‘கிராமங்களின் செல்லப்பிள்ளைகளாக நாங்கள் மாறிவிட்டோம்’ என்று பெருமைப்படும் குளித்தலை டி.காயத்ரி,

இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோரைப்பாராட்டமல் இருக்க முடியுமா?

நீங்களே சொல்லுங்கள்!

1 comment:

Praveenkumar said...

இவர்களை நெஞ்சமகிழ்ந்து பாராட்டலாம்.
பகிர்ந்தமைக்கு நன்றி.

Post a Comment