Monday, July 6, 2009

“தண்ணி” வித்த காசு தள்ளாடுது




தமிழில் பெயர்சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்களிக்கப்படும் என்று 2006ல் தமிழக அரசு முடிவெடுத்த்து.

அதுவரை கேளிக்கைவரி மூலம் 75 கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது.

கடந்த ஆண்டில் கேளிக்கை வரி மூலம் வந்த வருமானம் 16 கோடி மட்டுமே.

இந்த வருவாய் இழப்பினால் உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது கிராமப்புற வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பணவருவாய் குறைந்தாலும் பரவாயில்லை. தமிழ்ப்படங்களின் தரம் உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

படங்களின் பெயர்கள் தமிழில் இருந்தாலும் திரைக்கதை, வசனம், பாடல்வரிகள், கேமிரா கோணங்கள் இவையெல்லாம் நடிகைகளின் சதைமடிப்புகளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு வெளிவர மறுக்கின்றன.

தமிழ் வளர்ச்சி என்கிற பெயரில் திரைப்படத்தை தொழிலாக செய்துகொண்டிருப்பவர்களுக்கு வரிச்சலுகை கொடுத்துக்கொண்டிருப்பது அநியாயம்.

சாராயம் விற்ற காசு கைநிறைய இருக்கும் துணிச்சலில் தமிழக அரசு தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகை அளிப்பதாகத்தான் கருதவேண்டியுள்ளது.

சாராயம் விற்ற காசு இப்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

எதையெல்லாம் இலவசமாகக்கொடுக்கலாம் என்கிற தராதரம் இல்லாமல் பொதுப்பணம் விரயமாகிக்கொண்டிருக்கிறது.

அரசு இதே பாதையில் தள்ளாடி நடந்துகொண்டிருந்தால் வெகுவிரைவில் “இலவச சாராயம்” வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:

Post a Comment