Sunday, March 1, 2009

பசுமைக்குடில் வாயுக்களும் புவி வெப்பமும்


புவிவெப்பமடைதல் இன்றைய தலையாய பிரச்சினை இல்லையா?

குளிர் நாடுகளில் தாவரங்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படுவதால் கண்ணாடி வீட்டிற்குள்
(green house) செடிகளை வளர்க்கிறார்கள். கண்ணாடி வெப்பத்தை எளிதில் கடத்துவது இல்லை.
கண்ணாடி வீட்டிற்குள் புகுந்தவெப்பம் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது.
இதனால் கண்ணாடி வீட்டிற்குள் எப்போதும் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.

நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை
வைத்திருக்கிறது. பூமி அதிகமாக சூடாகிவிடாமலும், அதிகமாக குளிர்ச்சியடைந்து விடாமலும்
சம நிலையை இந்த காற்று மண்டலம்தான் ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலுக்கு சட்டை
எப்படியோ அதைப்போல பூமிக்கு காற்று மண்டலம்தான் சட்டையாக இருக்கிறது.

காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் ஆகிய
வாயுக்களும் இருக்கின்றன. இந்த வாயுக்கள் கண்ணாடியைப்போல செயல்படுவதால் பசுமைக்குடில்
வாயுக்கள் (greenhouse gases) என்று பெயர் வைத்திருக்கிறோம்.

சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தை மண், நீர், உயிரிகள் இவையெல்லாம் உறிஞ்சிக்
கொள்கின்றன. உறிஞ்சிக்கொண்டவை போக மீதமுள்ள வெப்பம் வான்வெளிக்கே திருப்பிவிடப்
படுகிறது. ஒரு பகுதி வெப்பம் வான்வெளிக்கே மீண்டும் சென்றாலும், பசுமைக்குடில்
வாயுக்களால் பூமிப்பரப்பை நோக்கி வெப்பம் மீண்டும் திருப்பபடுகிறது.

வான்வெளியில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அளவு
அதிகரிக்கும்போது, பூமிப்பரப்பை நோக்கி திருப்பப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது.

இதனால் பூமி இயல்பைவிட அதிகமாக வெப்பமடைகிறது.

புவிவெப்பமடைவது இன்றைய உலகத்தின் தலையாய பிரச்சினையாகிப்போனது

இப்படித்தான்..

காற்று மண்டலத்திற்குள் மனிதகுலம் துப்பும் பசுமைக்குடில் வாயுக்களை குறைப்பதுதான்

பிரச்சினை தீர ஒரே வழி.

இன்னும் அறிந்து கொள்ள:
http://www.epa.gov/climatechange/kids/version2.html

No comments:

Post a Comment