Monday, March 30, 2009

முன்மாதிரியான கல்வி அதிகாரி




29.03.2009 நாளிட்ட தினமணி செய்தியில் திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.ஏ.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. எழுத இருக்கும் மாணவர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று உற்சாகப்படுத்துவதாக படத்துடன் செய்தி வெளியாகி உள்ளது.

பொதுத்தேர்வின் முக்கியத்துவத்தை உணராத பெற்றோர்கள் தேர்வு சமயம் என்பதைக்கூட பொருட்படுத்தாது தம்முடைய பிள்ளைகளுக்கு வீட்டுப்பணி கொடுப்பது வழக்கமான ஒன்றுதான்.

முதன்மைக்கல்வி அலுவலர் வீட்டு சந்திப்பின்போது மாணவர்களை மட்டுமின்றி அவர்தம் பெற்றோரையும் சந்தித்து மாணவர்கள் தேர்விற்கு தயார் செய்யும் சூழலை வீட்டில் ஏற்படுத்தித்தருமாறு கோருவது பாராட்டிற்குரியது.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இதுபோன்று முன்மாதிரியாக் செயல்படுவதைப்போன்று அவருக்குக்கீழ் பணிபுரியும் ஆசிரியத்தோழர்களும் செயல்படுவதை தினமணி போன்ற நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டால் ஆசிரியர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்பது என் கருத்து.

No comments:

Post a Comment