Saturday, January 29, 2011

பாப்பா பாப்பா கதை கேளு (0029)

பாப்பா பாப்பா கதை கேளு

பாப்பா பாப்பா கதை கேளு
பாரத நாட்டின் கதை கேளு
கதையைக் கேட்டதும் நீ ஆடு
கன்னித்தமிழில் புகழ் பாடு

காந்தி பிறந்தது நம்நாடு
கலைகள் வளர்த்தது நம்நாடு
நேரு ஆண்டது நம்நாடு
நினைத்தே வாழ்வில் நடைபோடு

சுதந்திரம் கண்டது நம்நாடு
சொர்க்கம் தவழுது நம்நாடு
இந்தியர் என்றொரு தாய்மடியில்
இயங்கும் நாட்டின் புகழ் பாடு

உழைப்பு என்பது நம் மூச்சு
உயர்வு ஒன்றே நம் பேச்சு
கற்றவர் நிறைந்த நாடென்று
கைகளைப் பிணைந்தே நீ ஆடு

பாப்பா பாப்பா கதை கேளு
பாரத நாட்டின் கதை கேளு
கதையைக் கேட்டதும் நீ ஆடு
கன்னித்தமிழில் புகழ் பாடு

நன்றி: தினமணி-சிறுவர்மணி

No comments:

Post a Comment