நீலவானம்
உருவத்தில் பெரியது யானை
உடைக்க எளியது பானை
உரியில் தாவிடும் பூனை
வேடன் அடிப்பது மானை
வானத்தில் தெரிவது மின்னல்
வாயில் அரைப்பது தின்னல்
பெண்கள் தொடுப்பது பின்னல்
பலகணி என்பது சன்னல்
சுமையாய் இருப்பது இரும்பு
கடித்தால் இனிப்பது கரும்பு
பூத்துச் சிரிப்பது அரும்பு
புற்றில் வாழ்வது எறும்பு
காதுக்கு இனியது கானம்
காப்பது நம்மை தானம்
நீர்மோர் என்பது பானம்
நீலமாய்த் தெரியுது வானம்!
நன்றி: சிறுவர்மணி
Saturday, January 29, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment