Saturday, January 29, 2011

பள்ளிக்கூடம் (028)

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம் விட்டனர்
பாலர் ஓடி வந்தனர்
வீட்டுக்குள்ளே நுழைந்தனர்
வீசி பையை எறிந்தனர்

கையைக் காலை கழுவினர்
உடையை மாற்றிக் கொண்டனர்
வீட்டை விட்டு ஓடினர்
வீதியில் ஒன்றாய்க் கூடினர்

கபடி ஆட்டம் ஆடினர்
காக்காய் ஓட்டம் ஓடினர்
கிரிக்கெட் கூட ஆடினர்
கோலி கில்லி அடித்தனர்

பந்துவீசி பிடித்தனர்
பம்பரம் கூட சுற்றினர்
பட்டம் விட்டு சிரித்தனர்
பாண்டி ஆட்டம் ஆடினர்

ஆட்டம் எல்லாம் முடிஞ்சாச்சு
அவரவர் வீட்டுக்கு போயாச்சு
பாங்காய் பையை எடுத்தாச்சு
பாடம் படிக்க அமர்ந்தாச்சு!

நன்றி: சிறுவர்மணி

No comments:

Post a Comment