Saturday, January 29, 2011

மழையே மழையே போ போ போ (031)

மழையே மழையே போ போ போ

மழையே மழையே போ போ போ
மற்றொரு நாள் நீ வா வா வா
அழையா விருந்தாய் நீ வந்தாய்
ஆறு குளங்களில் நீர் தந்தாய்

உடைந்தது பாலம் ஊரெங்கும்
ஊர்கள் மிதக்குது ஆறெங்கும்
அடைந்தது வீதிகள் சேறெங்கும்
அணைவெள்ளம் சூழ்ந்தது சீரங்கம்

உச்சிப்பிள்ளையார் தப்பிவிட்டார்
உயரே இருப்பதால் அவர் பிழைத்தார்
குச்சும் குடிசையும் மாடிகளும்
குபு குபு என்றே மிதக்கிறதே

பள்ளிகள் விடுமுறை மழையென்று
பதுங்கினோம் வீட்டிலே மழையென்று
துள்ளியாம் ஆடலே மழையென்று
சோறுயாம் சமைக்கலே மழையென்று

விருந்தும் மருந்தும் மூன்றே நாள்
விடாமழை இடிபுயல் எத்தனை நாள்
இருந்தும் தொடர்ந்தும் நீ பெய்ய
இன்னொரு நாள் நீ வா மழையே

நன்றி: சிறுவர்மணி

No comments:

Post a Comment