குழந்தைப்பூ
பூவைப் போன்றது குழந்தைதான்
பூவும் குழந்தையும் ஒன்றேதான்
குழந்தை என்றால் குழந்தைதான்
குழந்தை போலொன்று இல்லைதான்
கள்ளம் இல்லா உள்ளம்தான்
கடவுள் வாழும் இல்லம்தான்
பிள்ளை மனமும் வெள்ளைதான்
பேசும் தெய்வம் பிள்ளைதான்
அசையும் குழந்தை மழலைதான்
அமுதம் ஊறும் குழலேதான்
இதனில் சிறந்தது யாழேதான்
என்பார் செவிகள் பாழேதான்
நடக்கும் குழந்தை அன்னம்தான்
நடந்தால் மகிழ்வாள் அன்னைதான்
சிரிக்கும் குழந்தை கன்னம்தான்
சின்னத் தங்கக் கிண்ணம்தான்!
நன்றி: தினமணி-சிறுவர்மணி
Saturday, January 29, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment