Saturday, January 29, 2011

இரண்டு குதிரைகளின் கதை

ஒரு பரந்த மேய்ச்சல் நிலத்தில் இரண்டு குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்று குருட்டுக்குதிரை.

குதிரைகளின் சொந்தக்காரன் மிகவும் நல்லவன்.

அவனுக்கு குருட்டுக்குதிரையை கொல்ல மனமில்லை. அதனால் அவனுக்குச்சொந்தமான மேய்ச்சல் நிலத்தில் அந்த குருட்டுக்குதிரையை மேய விட்டிருந்தான்.

குருட்டுக்குதிரைக்கு துணையாக ஒரு நல்ல குதிரையையும் விட்டு வைத்தான். நல்லகுதிரையின் கழுத்தில் ஒரு வெண்கல மணியையும் கட்டிவிட்டிருந்தான் அவன்.

கழுத்தில் மணியுடன் இருந்த குதிரை ஒரு அறிவுள்ள குதிரை.

அது மேயும்போது, குருட்டுக்குதிரை மேயும் இடத்தையும் சரி பார்த்துக்கொள்ளும்.

குருட்டுக்குதிரை வழிதவறி வெகுதூரம் போய்விட்டால் தன்னுடைய கழுத்து மணியை வேகமாக அசைத்து ஒலியெழுப்பும்.

குருட்டுக்குதிரையும் தன்னுடைய தவறை உணர்ந்து மணியோசை வந்த திசைநோக்கி நகர்ந்து மேயத்தொடங்கும்.

குருட்டுக்குதிரைக்கு ஆதரவாக நல்ல குதிரையின் மணியோசை இருந்தது.


குதிரைகளின் சொந்தக்காரனைப்போன்றவர்தான் நம்மைப்படைத்த இறைவனும்.

நாம் சில நேரங்களில் குருட்டுக்குதிரைகளாக இருக்கிறோம்.

அறியாமை, கல்லாமை, இல்லாமை, போன்ற துன்பங்களால் சிரமப்படுகிறோம்.

அதுபோன்ற சமயங்களில் நல்ல குதிரையின் கழுத்து மணியோசைபோன்று சில நல்ல உள்ளங்கள் நமக்கு உதவி செய்கின்றன.

வேறு சில சமயங்களில் நாமே கழுத்து மணியோசையாக மாறி இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறோம்.

நம்மைப்படைத்த இறைவன் இரண்டு வகை மக்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

No comments:

Post a Comment