Saturday, January 29, 2011

பூக்கள் (030)

பூக்கள்

பூக்களென்றால் புன்னகை
இயற்கையழகின் வல்லமை
நிறமிருக்கும் ஆயிரம்
கணந்தோறும் தீவிரம்!

வாழ்க்கைக்கான நாட்டம்
நன்மை கொண்ட கூட்டம்
பிள்ளையுள்ளக் களிப்பு
புவியணிந்த ஜொலிப்பு!

ஈகை எங்கள் இயல்புதான்
இருக்கும் வரை இன்பந்தான்
பூக்களென்றால் பெருமையே
புத்திளமை எளிமையே!

வெயிலுங் காற்றும் நண்பர்கள்
ரசிப்பவரே தொண்டர்கள்
எதிரியென்று எவரிங்கே
குறைந்தகால வாழ்விலே!

பூவைப்போன்ற அற்புதம்
நீயுமென்று தெரியுமா?
மனத்தினிலே பூ மலர்ந்தால்
உலகம் ஒரு தோட்டம்தான்!

-கவித்தம்பி

சிறுவர்மணி 03.07.2010

No comments:

Post a Comment