Saturday, January 29, 2011

செல்லப்பூனை (021)

செல்லப்பூனை

சின்னச்சின்ன பூனையே
செல்லக்குட்டி பூனையே
அறையை விட்டு வராதே
அடுத்தவர் கண்ணில் படாதே

அந்தக் குவளையில் பாலுண்டு
இந்தக் கிண்ணத்தில் சோறுண்டு
வேண்டும்போது எடுத்துண்பாய்
வெளியே மட்டும் வராதே

கட்டில் அடியே இடமுண்டு
புரண்டு படுக்கத் துணியுண்டு
உருட்டி ஆட பந்துண்டு
ஓடியாட இடமுண்டு

பள்ளிக்குப்போகணும் தெரிகிறதா
மாலையில் வருவேன் புரிகிறதா
சொன்னது எதையும் மறக்காதே
தொல்லையில் சிக்கித்தவிக்காதே!

நன்றி: சிறுவர்மணி

No comments:

Post a Comment