மாம்பழமாம் மாம்பழம்
மணி மாமா கூடையிலே
மாம்பழமாம் மாம்பழம்
சந்தையிலே விற்றிடவே
முந்தி முந்திப் போனாராம்
ஓடியோடிக் களைத்த மாமா
ஓரிடத்தில் அமர்ந்தாராம்-பசி
ஓயாமலே இருந்ததாலே
ஓர் பழத்தைக் கடித்தாராம்
கனிகளிலே இனித்தகனி
மாங்கனியே என்றாராம்-உடன்
கனிந்தகனி ஒன்றெடுத்து
களிப்புடனே தின்றாராம்
யாருமில்லா நடுவழியில்
காரமில்லா விருந்தடா-இதை
நானுண்ணாமல் வேறொருவர்
உண்ணுவதா சொல்லடா
இப்படியே சொன்னபடி
எல்லாக்கனியும் தீர்த்தாராம்
அப்படியே சந்தை மறந்து
காட்டுவழியைப் பார்த்தாராம்
நன்றி: சிறுவர்மணி
Saturday, January 29, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment