பழுத்த ஓலையும் பச்சை ஓலையும்
பழுத்த ஓலை மண்ணில் வீழப்
பச்சை ஓலை சிரித்ததாம்
பழைய ஓலை வீழும் அழகைப்
பார்த்துப் பார்த்து ரசித்ததாம்
கழுத்து முறிய விழுந்த ஓலை
அடுப்பில் எரிந்து போனதாம்
காலம் என்னும் காலன் கணக்கில்
பச்சை பழுக்கலானதாம்
தானும் கறுத்துப் போனபோது
தனது நிலைமை உணர்ந்ததாம்
தனக்கும் உண்டு மரணம் என்ற
தலை எழுத்து புரிந்ததாம்
தென்னையிடம் தனது உடலை
சேர்த்தணைக்கச் சொன்னதாம்
என் முடிவும் மண்ணிடமே
என்று பதில் வந்ததாம்
தான் சிரித்த சிரிப்பதனைத்
தானும் கேட்டு அழுததாம்
தனக்கு அழ யாரும் இன்றி
தரையில் வீழ்ந்து மாண்டதாம்
நன்றி: சிறுவர்மணி
Saturday, January 29, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment