Saturday, January 29, 2011

மழையே மழையே வா வா! (032)

மழையே மழையே வா வா!


மழையே மழையே வா வா
மழலையர் மகிழ்ந்திட வா வா
வானத்து அமிழ்தமே வா வா

ஏங்கி அழைத்தோம் வா வா
ஏற்றம் தந்திட வா வா
செடிகொடி சிரித்திட வா வா
சீக்கிரம் சீக்கிரம் வா வா

துளிகள் தெறித்திட வா வா
தெள்ளிய நீராய் வா வா
ஏரிகள் நிரம்பிட வா வா
ஏமாற்றாமல் வா வா

வெப்பம் தணித்திட வா வா
விளைச்சல் பெருகிட வா வா
குடிநீர் அளித்திட வா வா
குதூகலம் நிறைந்திட வா வா!

-இரா.சாந்தகுமார்

சிறுவர்மணி-12.06.2010

No comments:

Post a Comment