Monday, January 31, 2011

ஊர்வன (020)



ஊர்வன என்பவை தரையோடு தரையாக ஊர்ந்துசெல்லும் பிராணிகள் ஆகும்.

ஊர்வனவற்றின் சிறப்புக்குணங்கள்:
1. முட்டையிட்டுக்குஞ்சு பொரித்தல்
2. முதுகெலும்புள்ள பிராணிகள்
3. கால்களில் கொக்கிபோன்ற உகிர்களைக்கொண்ட விரல்கள்.

பறவைகளும் கால்களில் கொக்கிபோன்ற உகிர்களைக்கொண்டிருக்கின்றன. எனவே பறவை அல்லாத ஊர்ந்துசெல்லும் உயிர்களை ஊர்வன என்று வகைப்படுத்தலாம்.

எறும்பு, தேள், பூரான், பூச்சிகள், சிலந்தி போன்றவற்றிற்கு முதுகெலும்பு இல்லை. எனவே ஊர்வன என்று இப்பிராணிகளைக்கூற இயலாது.

சிறுவர்கள் வேலிகள், புதர்கள் இவற்றில் காணப்படும் ஓணான்களை எந்தவித காரணமும் இன்றி அடித்துக்கொன்றுவிடுகின்றனர். ஓணான்கள் நமக்கு எந்த தீங்கும் செய்வதில்லை. மாறாக நமக்கு அவை நன்மையே செய்கின்றன.

பாம்பைக்கண்டால் அடித்துக்கொல்லும் மானிடர்கள் உண்டு. பயந்து ஓடும் மானிடர்களும் உண்டு. பாம்புகள் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கிழைப்பதில்லை. பாம்புகடித்து சிலர் இறந்திருக்கலாம். தனக்கு ஆபத்து என்று உணரும்போதுமட்டுமே பாம்புகள் கடிக்கின்றன.

மனிதர்களைத்தேடிவந்து எந்த பாம்பும் கடிப்பதில்லை.

No comments:

Post a Comment