குயிலம்மா......
கருப்புக் குயிலு கண்ணம்மா
கானம் ஒண்ணு பாடம்மா
கனியும் சோறும் தாரேம்மா
கவிதை ஒண்ணு சொல்லம்மா
காட்டுக்குள்ளே மறைஞ்சி நின்னு
கண்ணாமூச்சி காட்டாம
கண்ணுக்கு முன்னே வந்திடம்மா-என்
கருப்புக் குயிலு கண்ணம்மா
கட்டெறும்பு வருதும்மா-உன்
காலைக் கடிக்கப் பார்க்குதம்மா
கத்தி நானும் கூவுறேம்மா
காற்றாய் நீயும் பறந்திடம்மா
ஆர்.ஜெயசீலன்
சிறுவர் மணி
9.1.2010
Friday, January 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment