Friday, January 28, 2011

குயிலம்மா......(015)

குயிலம்மா......

கருப்புக் குயிலு கண்ணம்மா
கானம் ஒண்ணு பாடம்மா
கனியும் சோறும் தாரேம்மா
கவிதை ஒண்ணு சொல்லம்மா

காட்டுக்குள்ளே மறைஞ்சி நின்னு
கண்ணாமூச்சி காட்டாம
கண்ணுக்கு முன்னே வந்திடம்மா-என்
கருப்புக் குயிலு கண்ணம்மா

கட்டெறும்பு வருதும்மா-உன்
காலைக் கடிக்கப் பார்க்குதம்மா
கத்தி நானும் கூவுறேம்மா
காற்றாய் நீயும் பறந்திடம்மா

ஆர்.ஜெயசீலன்
சிறுவர் மணி
9.1.2010

No comments:

Post a Comment