Saturday, January 29, 2011
கொட்டம் அடிக்குது வானம் (017)
கொட்டம் அடிக்குது வானம்
கொட்டம் அடிக்குது வானம்
கொட்டுது மழை எங்கும்
பட்டென மின்னல் தெரிக்கும்
பார்க்கக் கண்கள் கூசும்
சட்டென இடியும் இடிக்கும்
சப்தம் காதை பிளக்கும்
எட்டிக் காற்று வீசும்
எங்கும் ஈரம் பரவும்
குட்டைக் குளங்கள் நிறையும்
குடிக்கத் தண்ணீர் கிடைக்கும்
தோட்டமும் வயலும் செழிக்கும்
தோன்றும் மகிழ்ச்சி எங்கும்
கொட்டும் மழையால் பூமி
குளிர்ந்து நன்மை பயக்கும்
வாட்டும் வெம்மை நீங்கும்
வளமை எங்கும் சேரும்
நன்றி: தினமணி-சிறுவர்மணி
Labels:
மழலையர் பாடல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment