வட்டமான ஆதவன்
வானில் வந்து நிற்கிறான்.
தட்டுப்போல மின்னி மின்னித்
தங்கமாகத் தெரிகிறான்.
கண்ணைக்கூசும் ஆதவன்
காண்பாய் என்னை என்கிறான்.
விண்ணில் எங்கும் ஒளி நிறைத்து
வியப்பை நமக்குத் தருகிறான்.
செம்மை ஒளியை ஆதவன்
செடிகள்மீது தெளிக்கிறான்.
நம்மை நோக்கி நகைத்த வண்ணம்
நானிலத்தைப் பார்க்கிறான்.
பார்க்கப் பார்க்க ஆதவன்
பளபளப்பாய் ஆகிறான்.
வளர்ந்துவிட்ட வெள்ளி போல
வடிவம் மாறி வருகிறான்.
- அழகனார் - சிறுவர்மணி - 08.01.2011
Monday, January 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment