ஐம்புலன் அறிவோம்
உண்டு பேசும் வாய்தானே
உள்ளத்துள்ளதை வெளிப்பேசும்
கண்டு களிக்கும் கண்கள்தான்
கருணை கோபம் காட்டிவிடும்!
மணமே அறிய மூக்குதவும்
மண்ணில் வாழ மூச்சாகும்
கணமே காற்று இல்லையெனில்
காணும் உயிர்கள் அழிவாகும்!
ஒலியை உணரும் காதுகளோ
உள்ளம் உணர்த்தும் தூதுவராம்
வலிவும் நலமும் அளிக்கின்ற
வார்த்தைகள் மட்டும் கேட்போமே!
தொட்டு உணர தோலுதவும்
தோலே நமக்கு அழகூட்டும்
விட்டால் அழுக்கு தினம் சேரும்
விரும்பிக்குளித்தால் நலம் பயக்கும்!
காலை மாலை நடந்துவிடு
காற்று வாங்க உலவிவிடு
நாளை என்பதை மறந்துவிடு
நடப்பதை இன்றே தொடங்கிவிடு!
பத்து விரல்கள் சொத்தாகும்
பலனைக்கொடுக்கும் முத்தாகும்
வித்தாய் கைகள் நமக்கிருக்கு
விரைந்தே உழைப்பீர் தோழர்களே!
நன்றி: வ.நஞ்சுண்டன்-தினமணி சிறுவர்மணி-29.05.2010
Friday, January 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment