Friday, January 28, 2011

குரங்கு (014)

குரங்கு

குன்று காடு ஊர்ப்புறத்தில்
குரங்குக்கூட்டம் வாழும்
கோயில்களில் தோப்புகளில்
கும்பலாகச் சூழும்!

ஒன்றையொன்று துரத்திக்கொண்டு
ஓடி மரத்திலேறும்
ஓட்டுவதற்கு எவர் சென்றாலும்
‘உர் உர்’ என்றே சீறும்!

குட்டியினை மார்பிலணைத்துக்
கொண்டே எங்கும் திரியும்
கொம்பு விட்டுக் கொம்புதாவி
குதித்தே விந்தை புரியும்!

பட்டுத்தலை மயிர் விலக்கிப்
பார்த்துப் பேனை பொறுக்கும்
பரபரப்பாய் சொறிந்தபடி
இங்குமங்கும் திரியும்!

கொம்பிலேறி நின்றபடி
குதித்து அதனை உலுக்கும்
கோபம் வந்தால் கத்தி கடித்துக்
குதறி சண்டை வலுக்கும்!

கம்பெடுத்தால் குரங்காட்டியின்
கட்டளைபோல் நடக்கும்
காண்பவர்க்கு வியப்பு தந்து
குறும்புசெய்து குதிக்கும்!

நன்றி: திட்டக்குடி முத்து முருகன்-சிறுவர் மணி 24.07.2010

No comments:

Post a Comment