Friday, January 28, 2011

காட்டுப்பாக்கம் தாத்தா (005)

காட்டுப்பாக்கம் தாத்தா

காட்டுப்பாக்கம் தாத்தாவுக்குக்
காடுபோல தாடியாம்
காடுபோல தாடியாம்
மாடிமேலே நிற்கும்போது
தாடி தரையில் புரளுமாம்!

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை, குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக்கொண்டிருந்தன!

உச்சிமீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்.
அச்சு அச்சு என்றபோது
அவை அனைத்தும் பறந்தன!


நன்றி-தம்பி சீனிவாசன், சிறுவர்மணி02.10.2010

No comments:

Post a Comment