Saturday, January 29, 2011

கோடை (019)

கோடை

கோடைக் காலம் வந்தது
கொடிய வெப்பம் தந்தது
ஆடை களைந்த போதிலும்
ஆளை நனைக்கும் வியர்வையே!

ஓடை போல கானலும்
ஓடும் நீரைப் போலவே
தாரை உருக்கிப் போகுதே
தரையில் நடக்க இயலுமோ!

மேடை போட்ட பசுமையாய்
மெலிந்து வளர்ந்த புல்வெளி
மேலை வெப்பம் தீய்த்ததே
மேலும் வறட்சி காய்த்ததே!

கூடை நிறைய பூக்களும்
குளிர்ந்து மகிழும் மழையதும்
கூடிவந்து சேருமோ
கோடை கொடுமை மாறுமோ?

-வெ.தமிழழகன், சிறுவர்மணி 10.04.2010

No comments:

Post a Comment