ஆடி-ஓடி-விளையாடு
ஆடி ஓடி விளையாடு
அந்திப்பொழுதில் விளையாடு
கூடிப்பழகி விளையாடு
கொஞ்சிக்களித்து விளையாடு
பாட்டும் கதையும் கேட்டுக்கொள்
பயன்படும் உன்றன் அறிவுக்கு
ஆட்டம் ஓட்டம் பழகிக்கொள்
அவசியம் அஃதுன் வளர்ச்ச்சிக்கு
சும்மா இருத்தல் ஆகாது
சோம்பித்திரிதலும் கூடாது
தம்பி உன்னுடல் அழகோடு
தழைத்திடவேண்டும் விளையாடு
கைகள் வீசிப்பந்தாடு
கால்கள் தாவிப்பாய்ந்தோடு
மெய்யை வளைத்து மேல்கீழாய்
மெல்ல மெல்ல பயிற்சியெடு
நீளம் உயரம் நீ தாண்டு
நீரில் பாய்ந்து நீச்சலிடு
தாளம் பொருந்திக் கும்மியடி
தாழ்ந்து நிமிர்ந்து கும்மியடி
தொடு தொடு ஓடித் தொட்டுப்பிடி
தூக்கப் பேயைத் துரத்தியடி
சடுகுடு சடுகுடு மூச்சுப்பிடி
சமர்த்தாய் இருந்தால் வெற்றிப்படி!
நன்றி: தேவ. சுந்தரவடிவேல்-தினமணி-சிறுவர்மணி
Friday, January 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment