Saturday, January 29, 2011

நான் யார்? (025)

நான் யார்?

ஊரில் புகுந்து போகிறேன்
உன்னில் கலந்து வாழ்கிறேன்
ஆற்றைக் கடலைத் தழுவினேன்
அகப்படாமல் நழுவினேன்

வேரை உலுக்கி சாய்க்கிறேன்
வெப்பம் போக்கி தணிக்கிறேன்
மாறி மாறி வீசுவேன்
மலரில் அமர்ந்து பேசுவேன்

வேறு யாரும் என்னைப்போல்
வேகத்தோடு செல்லுவார்?
விருப்பத்தோடு உலகெல்லாம்
சுற்றிப்பார்த்து திரும்புவார்

மாறும் மனித உலகினை
மயக்கும் சக்தி கொண்ட என்
பேரு என்ன தெரியுமா?
காற்று என்றால் புரியுமா?

நன்றி: சிறுவர்மணி

No comments:

Post a Comment