தவளையார்
தட தடவென தவளையார்
தாவித் தாவி வருகிறார்
தண்ணிக்குள்ளே விழுகிறார்
தரையை நோக்கி எழுகிறார்
கொட கொடவென மழையுமே
கொட்டி குளமும் நிறைந்ததே
சல சலவென அலையிலே
குதித்து குதித்து மிதக்கிறார்
கட முடவென ராகத்தை
கர கரவென பாடுறார்
கடுங் குளிரில் மகிழ்ச்சியாய்
கண் விழித்து ஆடுறார்
வெட வெடவென நடுங்கினும்
வெக்கை சுட்ட போதிலும்
தட தடவென தவளையார்
தாவித் தாவி வருகிறார்!
நன்றி: சிறுவர்மணி
Saturday, January 29, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment